பெரும் முதலாளிகளைக் காக்க மக்களின் பணத்தை செலவழிக்கிறார் பிரதமர்: கோவையில் காங்கிரஸ் எம்.பி பேச்சு

கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ராகுல் கவுடா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ராகுல் கவுடா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:- 

காங்கிரஸ் ஆட்சியின் போது, உலகில் தலை சிறந்த விமானப் படையாக உருவாக என்ன தேவை? என்று இந்திய விமானப் படையிடம் கேட்கப்பட்டது. அப்போது விமானப் படைக்கு 128 மல்டி லெவல் விமானங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதில் ரபேல் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பேச்சு வார்த்த நடத்தி வரப்பட்டது. 18 விமானங்களை நேரடியா டெசோ நிறுவனம் மூலம் வாங்குவது எனவும், மீதமுள்ள 108 விமானங்கள் பெங்களூருவில் 70 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஹிந்துஸ்தான் எரோனாட்டிகலால் தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.



உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் போது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக இருந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2015-ல் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்வதற்கு 12 நாட்களுக்கு முன்பு அனில் அம்பானி பாதுகாப்பு சம்பந்தமான புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

பாரிஸ் சென்ற மோடி 36 விமானங்களை வாங்குவதாக அறிவித்தார். இந்திய விமானப் படை 128 விமானங்கள் தேவையென கேட்டிருந்த நிலையில் 36 விமானங்களை மட்டும் வாங்க பிரதமர் முடிவு செய்தது எவ்வகையில் உலகில் தலை சிறந்த விமான மாறும்? இதனை வாங்குவதில் நாடாளுமன்ற கூட்டு குழுவின் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டது.

விமானங்கள் வாங்குவதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இது குறித்த கேள்விகள் எழுந்த போது உடனடி தேவைகள் இருந்ததால் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை விமானங்கள் வழங்கப்படவில்லை.



மேலும், இது குறித்து கேள்வி எழுப்பியபோது பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டது. 526 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்கள் மூன்று மடங்கு உயர்த்தி வாங்கப்பட்டது. சீனாவிடம் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் அனில் அம்பானியை காப்பாற்ற மக்கள் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மோடி அரசிடம் இருந்து பதில் இல்லை.

அனுபவமே இல்லாத அம்பானி நிறுவனத்திற்கு எதற்கு வாய்ப்பு அளித்தனர்? பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு மோடி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...