சசிகுமார் கொலை வழக்கு: சாயிபாபா காலனியில் என்.ஐ.ஏ திடீர் சோதனை

கோவை: இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று கோவை சாயிபாபா காலனியில் திடீர் சோதனை நடத்தினர்.


கோவை: இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று கோவை சாயிபாபா காலனியில் திடீர் சோதனை நடத்தினர்.



இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்ற நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

வீடுகளில் சோதனை

இந்நிலையில், தேசிய புலனாய்வு துறை, சசிகுமார் கொலை வழக்கில் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் மூன்று செல் போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மீண்டும் சோதனை

இந்நிலையில் இன்று கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து எஸ்.பி தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று கோவை வந்தனர். இவர்கள் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் உதவியுடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஷாஜகான்(70) மகன் முன்னா (38) அவர்களின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். முன்னாவின் தந்தைக்கு சொந்தமான துடியலூர் பகுதியில் உள்ள மர அறுப்பு ஆலையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக வெளிநாட்டில் உள்ள முன்னா என்பவரை அழைத்திருந்தாகவும், ஆனால், வெளிநாட்டில் உள்ளதால் முன்னா வர மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் கோவையில் கடந்த மூன்று மாதங்களாக இல்லாத நிலையில் இன்று திடீரென பூட்டி இருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முகமை கண்காணிப்பாளர் ராகுல் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் சௌகத் அலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...