கோவை: ஜெட் ஏர்வேஸ் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 28-ம் தேதி முதல் கோவையில் இருந்து-டெல்லிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
கோவை: ஜெட் ஏர்வேஸ் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 28-ம் தேதி முதல் கோவையில் இருந்து-டெல்லிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
9W 994 என்ற எண் கொண்ட விமானம் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 8.40 மணியளவில் டெல்லி சென்றடையும். மேலும், டெல்லியில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.50 மணியளவில் கோவை வந்தடையும்.
சமீபத்தில் கோவையில் இருந்து பெங்களூர் மற்றும் சென்னை செல்லும் ஏழு விமானங்கள் சேவையை ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்தது. இதன் காரணமாக பயணிகள் மாற்று விமானங்களை தேர்வு செய்து அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விமான சேவைகளை தொடர்ந்து இயக்குமாறும் கோவை-டெல்லி-க்கு நேரடி விமான சேவையை தொடங்குமாறும் கொங்கு குளோபல் ஃபாரம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன்படி, தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவரும், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் கூறுகையில், "எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய இந்த விமான சேவை நேரங்களும் பொருத்தமாக உள்ளது. தற்போதைய விமானத்தின் அடிப்படையில் ஒரு வணிகர் அதிகாலையிலேயே டெல்லி சென்றடைய முடியும். அங்கு பணிகளை முடித்துவிட்டு அன்றே கோவை திரும்பவும் முடியும்." என்றார்.
இந்த விமானத்தின் மூலம் பயணிகள் மட்டும் பயன்பெறாமல், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இரவு 11 மணியில் இருந்து காலை 7 மணி வரை இயங்கும் விமானங்களுக்கான பெட்ரோலியம் மீதான வாட் வரி குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது இயங்கும் இந்த விமானம் அந்த மானியத்தைப் பெற தகுதி பெற்றுள்ளது.
இதே போல், கோவை-ஹைதராபாத் விமான சேவையையும் ஜெட் ஏர்வேஸ் அறிமுகம் செய்கிறது. ஹைதராபாத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.55 மணியளவில் கோவை வரும் அந்த விமானம், இங்கிருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு 3.45 மணியளவில் மீண்டும் ஹைதராபாத்தை சென்றடைகிறது.
9W 994 என்ற எண் கொண்ட விமானம் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 8.40 மணியளவில் டெல்லி சென்றடையும். மேலும், டெல்லியில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.50 மணியளவில் கோவை வந்தடையும்.
சமீபத்தில் கோவையில் இருந்து பெங்களூர் மற்றும் சென்னை செல்லும் ஏழு விமானங்கள் சேவையை ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்தது. இதன் காரணமாக பயணிகள் மாற்று விமானங்களை தேர்வு செய்து அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விமான சேவைகளை தொடர்ந்து இயக்குமாறும் கோவை-டெல்லி-க்கு நேரடி விமான சேவையை தொடங்குமாறும் கொங்கு குளோபல் ஃபாரம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன்படி, தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவரும், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் கூறுகையில், "எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய இந்த விமான சேவை நேரங்களும் பொருத்தமாக உள்ளது. தற்போதைய விமானத்தின் அடிப்படையில் ஒரு வணிகர் அதிகாலையிலேயே டெல்லி சென்றடைய முடியும். அங்கு பணிகளை முடித்துவிட்டு அன்றே கோவை திரும்பவும் முடியும்." என்றார்.
இந்த விமானத்தின் மூலம் பயணிகள் மட்டும் பயன்பெறாமல், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இரவு 11 மணியில் இருந்து காலை 7 மணி வரை இயங்கும் விமானங்களுக்கான பெட்ரோலியம் மீதான வாட் வரி குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது இயங்கும் இந்த விமானம் அந்த மானியத்தைப் பெற தகுதி பெற்றுள்ளது.
இதே போல், கோவை-ஹைதராபாத் விமான சேவையையும் ஜெட் ஏர்வேஸ் அறிமுகம் செய்கிறது. ஹைதராபாத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.55 மணியளவில் கோவை வரும் அந்த விமானம், இங்கிருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு 3.45 மணியளவில் மீண்டும் ஹைதராபாத்தை சென்றடைகிறது.