கோவை : லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க மக்களின் பங்கு என்ன என்பதை எடுத்துரைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் வரும் 1-ம் தேதி நடக்கிறது.
கோவை : லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க மக்களின் பங்கு என்ன என்பதை எடுத்துரைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் வரும் 1-ம் தேதி நடக்கிறது.
அறப்போர் இயக்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி சாந்தி திரையரங்கு எதிரே உள்ள அண்ணாமலை ஓட்டலில் 1-ம் தேதி மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. 'என்னங்க சார் உங்க சட்டம்.?' என்ற தலைப்பிலான இந்த சந்திப்பிற்கு வருகை தருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் ஊழலை எதிர்கொள்வது எப்படி..?, ஊழலை ஒழிக்கும் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்..?, வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடைமையும் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்..? ஜனநாயகத்தில் நேரடியாக மக்கள் பங்கு பெறுவது எப்படி..? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும், தொடர்புக்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவரை 9841894700 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
அறப்போர் இயக்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி சாந்தி திரையரங்கு எதிரே உள்ள அண்ணாமலை ஓட்டலில் 1-ம் தேதி மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. 'என்னங்க சார் உங்க சட்டம்.?' என்ற தலைப்பிலான இந்த சந்திப்பிற்கு வருகை தருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் ஊழலை எதிர்கொள்வது எப்படி..?, ஊழலை ஒழிக்கும் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்..?, வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடைமையும் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்..? ஜனநாயகத்தில் நேரடியாக மக்கள் பங்கு பெறுவது எப்படி..? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும், தொடர்புக்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவரை 9841894700 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.