திருப்பூர்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வரும் 2-ம் தேதி முதல் மூன்று நாட்கள் மாநாடு திருப்பூரில் நடக்கிறது.
திருப்பூர்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வரும் 2-ம் தேதி முதல் மூன்று நாட்கள் மாநாடு திருப்பூரில் நடக்கிறது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் பி. ஜான்சிராணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- திருப்பூரில் வரும் 2, 3 மற்றும் 4-ந் தேதிகளில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் மாற்றுத் திறனாளிகளான 8 பேர் பங்கேற்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசின் சார்பில் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றரை வருட காலமாக நடைமுறைப் படுத்தாமல் உள்ளது.

இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பு, உதவித் தொகை கிடைப்பது, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம், என்றார்.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் பி. ஜான்சிராணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- திருப்பூரில் வரும் 2, 3 மற்றும் 4-ந் தேதிகளில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் மாற்றுத் திறனாளிகளான 8 பேர் பங்கேற்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசின் சார்பில் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றரை வருட காலமாக நடைமுறைப் படுத்தாமல் உள்ளது.

இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பு, உதவித் தொகை கிடைப்பது, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம், என்றார்.