பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமில்லை

கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமில்லை என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறியுள்ளது.


கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமில்லை என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதிலும் உள்ள போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவையைப் பொறுத்தவரையில் மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளனர். மேலும், தொடர்ந்து விதிமுறையைப் பின்பற்ற தவறி, ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

அபராதம்

மோட்டார் வாகனச் சட்டம் 129-ன் படி, பொதுவாக இருசக்கர வாகன ஒட்டி ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்து போலீசாரிடம் சிக்கும்போது ரூ.100 அபராதமாக செலுத்த வேண்டும், தற்போது வெளியாகியுள்ள நீதிமன்ற உத்தரவின் படி, பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மட் அணியாமல் இருந்தால் அவரும் ரூ.100-ஐ அபராதமாக செலுத்த வேண்டும்.



அதன்படி, கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை நடத்தி வருகின்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்திருப்பவர் ஹெல்மட் அணியாமல் வரும் போது அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மட்டும் 250-க்கு மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த உத்தரவு பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இல்லை. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணியத் தேவை இல்லை என்கிறது மோட்டார் வாகனச் சட்டம். பிரிவு 417-A படி, இந்த விதிவிலக்கை அறிவித்துள்ளது மோட்டார் வாகனச் சட்டம்.



இது குறித்து கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் கூறுகையில், "இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் விதிவிலக்கு இருப்பது உண்மை தான். ஆனால், பாதுகாப்பு கருதி அவர்களும் ஹெல்மெட் அணிந்தால் நல்லது." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...