அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க முனைப்பு காட்டும் ஆசிரியர்கள்

கோவை: மாணவர் சேர்க்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடு விழா காணும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.


கோவை: மாணவர் சேர்க்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடு விழா காணும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தரம், அடிப்படை வசதிகள் மற்றும் ஆங்கிலக் கல்வி மோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் சமீப காலமாக மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பல்வேறு பள்ளிகள் மூடப்படும் நிலையம் ஏற்பட்டது.



இதன் காரணமாக 890 தலைமை ஆசிரியர்கள் உட்பட சுமார் 1500 ஆசிரியர்களும் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, லேப்டாப்கள், சீருடைகள், புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகள் என 14 வகையான பொருட்களை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இருந்த போதிலும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது சிரமமான செயலாகவே இருந்து வருகிறது. 

கடந்த 2017-ம் ஆண்டின் படி, 890 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே பயின்றுள்ளனர். 

இது குறித்து நல்லாசிரியர் விருது பெற இருக்கும் ஸதி கூறுகையில், " அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல மாணவர்கள் கான்வென்ட் பள்ளியில் படிக்க கோரி அவர்களது பெற்றோர்களால் மனம் மாற்றப்படுகின்றனர். எனவே அவர்களை அரசுப் பள்ளிகளில் நீடிக்க வைப்பதில் சிக்கல் நீடிக்கின்றது." என்றார். 



இந்த சூழலில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் களமிறங்கியுள்ளனர். ஒரு மாதத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியதாக தெரிகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...