கோவை: ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக புதிய ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தக்கூடாதவாறு நடவடிக்கை கோரி ஓட்டுனர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக புதிய ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தக்கூடாதவாறு நடவடிக்கை கோரி ஓட்டுனர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் டாடா மேஜிக் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 120-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
இந்த சூழலில், சங்க உறுப்பினர்களைத் தவிர்த்து வெளி ஆட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டுனர்கள் மத்தியில் தகராறு ஏற்படுவதாகவும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையுடன் அங்கு தகராறு செய்து வருவதால் ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் வகையில் உள்ள வெளி ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய ஆட்கள் ஆட்டோக்களை அங்கு நிறுத்தக் கூடாது என்று கூறியும் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் டாடா மேஜிக் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 120-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
இந்த சூழலில், சங்க உறுப்பினர்களைத் தவிர்த்து வெளி ஆட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டுனர்கள் மத்தியில் தகராறு ஏற்படுவதாகவும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையுடன் அங்கு தகராறு செய்து வருவதால் ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் வகையில் உள்ள வெளி ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய ஆட்கள் ஆட்டோக்களை அங்கு நிறுத்தக் கூடாது என்று கூறியும் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.