கேரள பேரிடரில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - கோவை மாவட்ட வன அலுவலர்

கோவை: கேரள பேரிடர் மற்றும் அதிலிருந்து மக்கள் மீண்டு வந்த முறை குறித்து கோவை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

கோவை: கேரள பேரிடர் மற்றும் அதிலிருந்து மக்கள் மீண்டு வந்த முறை குறித்து கோவை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறியுள்ளார்.



ஓசை அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீர்வளங்களை முறையான மேலாண்மை செய்ய வேண்டிய நேரம் இது. இது மிகவும் எளிது. இயற்கை பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்பட்டி ஜாமீன்தாரின் நிலம் களக்காடு, முண்டந்துறை காப்புக் காட்டுப்பகுதியில் இருந்தது. இதனை அரசு காப்புக்காடாக அறிவித்தது. அதே நேரத்தில், ஜாமீன்தார் வேறு இருவருக்கு லீசுக்கு கொடுத்துவிட்டார். 

இது தொடர்பாக, நீதிமன்றத்தில் 40 ஆண்டுகளாக நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி, தீர்ப்பு வெளியானது. அப்போது அது வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது மக்கள் விழிப்புணர்வு அதிகரித்தது. அப்போது நான் அங்கு களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குனராக பணியாற்றினேன். விழிப்புணர்வு இருந்தால் இயற்கை பாதுகாப்பில் திறம்பட செயலாற்ற முடியும்." என்றார். 



சையது கூறுகையில், "எங்கள் அமைப்பு மூலம் 50-வண்டிகளுக்கு மேல் அடங்கிய நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இங்கு கால் சென்டர் அமைத்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4000 மக்களுக்கு உதவியுள்ளோம்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...