கோவை: கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாநகர போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாநகர போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் துணை அணியார் லட்சுமி (சட்டம்&ஒழுங்கு), பெருமாள் (குற்றப்பிரிவு), சுஜித் குமார் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 50 போலீசார் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நேற்று இரவு மாநகரில் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையின் மாநகரில் உள்ள ஏ.டி.எம்., மையங்கள், வங்கிகள் உள்ள பகுதிகள், பூட்டப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது, சந்தேக வழக்கில் 108 பேர், பழைய குற்றவாளிகள் 36 பேர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 31 பேர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விட்டதாக 25 பேர், பணம் வைத்து சூதாடிய 5 பேர், கஞ்சா விற்றதாக ஒருவர் என மொத்தம் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.