கோவை: வடவள்ளியில் நடைபெற்ற வனம் வளர்ப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்தார்.
கோவை: வடவள்ளியில் நடைபெற்ற வனம் வளர்ப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்தார்.
வடவள்ளி குகன் கார்டனில், மாநகராட்சியுடன் ஆலயம் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் மியாவாக்கி முறையில் வனம் வளர்ப்பு விழா மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.6 ஏக்கரில் 3,550 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மரக்கன்றுகள் நடவு செய்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "41 வகையான மரக்கன்றுகளும், பழவகை மரங்களும் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக மரங்களின் வளர்ச்சி 10 ஆண்டு கால வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மியாவாக்கி முறையில் நடும்போது 2 வருடத்தில் மரங்கள் வளர்ச்சி பெறுகிறது. மேலும், மண்புழுக்கள், நுண்ணுயிரிகள் உருவாகி மண்வளம் பெருகும்.
இது மழை பொழிவிற்கான வாய்ப்பாக அமைகிறது. மண் அரிப்பு தடுக்கப்படும்." என்றார்.