நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் வசதிக்காக, கிராமந்தோறும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் வசதிக்காக, கிராமந்தோறும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் முதல்முறையாக கேத்தி உள்ளாடா என்ற பகுதியில் பொது மக்களின் பிரச்சினைகளை தெரிவிக்க காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

காவல்நிலையம் வர முடியாத பொதுமக்கள் தங்கள் புகார்களை இந்தப் பெட்டியில் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் பெட்டியை
காலை ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் திறந்து பார்ப்பார்கள். புகார்கள் ஏதேனும் இருப்பின், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஊட்டி துணை காவல்துறை கண்காணிப்பாளர் திருமேனி, கேத்தி காவல் ஆய்வாளர் விநாயகம், காவலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் முதல்முறையாக கேத்தி உள்ளாடா என்ற பகுதியில் பொது மக்களின் பிரச்சினைகளை தெரிவிக்க காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

காவல்நிலையம் வர முடியாத பொதுமக்கள் தங்கள் புகார்களை இந்தப் பெட்டியில் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் பெட்டியை
காலை ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் திறந்து பார்ப்பார்கள். புகார்கள் ஏதேனும் இருப்பின், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஊட்டி துணை காவல்துறை கண்காணிப்பாளர் திருமேனி, கேத்தி காவல் ஆய்வாளர் விநாயகம், காவலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.