நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேலும் சில விடுதிகளுக்கு நாளை (ஆக.,26) சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேலும் சில விடுதிகளுக்கு நாளை (ஆக.,26) சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 400 குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முதற்கட்டமாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 27 விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. 12 விடுதிகள் மீதான நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வந்தது. மேலும், பரிசீலனையில் உள்ள விடுதிகளின் பெயர்களை வெளியிட்டு, அதன் உரிமையாளர்கள் ஆவணங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி, தேவாலாவில் உள்ள அக்கார்டு நிறுவனத்தின் விடுதி உள்பட 12 விடுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா கூறும்போது :- 12 ரிசார்ட்டுகளுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 12 ரிசார்ட்டுகளில் மொத்தம் 117 கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சில கட்டிடங்களை குடியிருப்புகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை தவிர்த்து வணிக ரீதியான கட்டிடங்களை காலி செய்ய 24 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களுக்கு நாளை (ஆக.,26) சீல் வைக்கப்படும்.
தேவாலாவில் அக்கார்டு நிறுவனத்தில் உள்ள நிலங்களை 48 மணிநேரத்தில் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலங்களை மீட்க வனத்துறை பொறுப்பு எடுத்துள்ளது. பிரிவு 17 நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லியாளம் ஆணையர் இது குறித்து நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 400 குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முதற்கட்டமாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 27 விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. 12 விடுதிகள் மீதான நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வந்தது. மேலும், பரிசீலனையில் உள்ள விடுதிகளின் பெயர்களை வெளியிட்டு, அதன் உரிமையாளர்கள் ஆவணங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி, தேவாலாவில் உள்ள அக்கார்டு நிறுவனத்தின் விடுதி உள்பட 12 விடுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா கூறும்போது :- 12 ரிசார்ட்டுகளுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 12 ரிசார்ட்டுகளில் மொத்தம் 117 கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சில கட்டிடங்களை குடியிருப்புகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை தவிர்த்து வணிக ரீதியான கட்டிடங்களை காலி செய்ய 24 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களுக்கு நாளை (ஆக.,26) சீல் வைக்கப்படும்.
தேவாலாவில் அக்கார்டு நிறுவனத்தில் உள்ள நிலங்களை 48 மணிநேரத்தில் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலங்களை மீட்க வனத்துறை பொறுப்பு எடுத்துள்ளது. பிரிவு 17 நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லியாளம் ஆணையர் இது குறித்து நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.