கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா

கோவை: கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தற்கும், சமூக சேவையில் ஈடுபட்டதற்கும் தன்னார்வலர்களுக்கு அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் சார்பாக (Ananya's Nana nani homes) பாராட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.


கோவை: கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தற்கும், சமூக சேவையில் ஈடுபட்டதற்கும் தன்னார்வலர்களுக்கு அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் சார்பாக (Ananya's Nana nani homes) பாராட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.



வடவள்ளியில் உள்ள அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தரும், ஆரிய வைத்திய பார்மஸியின் தலைமை மற்றும் நிர்வாக டிரஸ்ட்டியுமான பத்ம ஸ்ரீ பி.ஆர்., கிருஷ்ண குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்த மற்றும் சமூக சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். 



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் "இந்தியாவின் பெருமை அதிகளவில் இளைஞர்கள் இருப்பதுதான். சுற்றுச்சுழலை பாதுகாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். சமூக சேவை செய்ததற்காக விருது கொடுக்கும் இதுபோன்ற விழாக்கள் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மேலும் ஊக்குவிக்கும்," என்றார்.



அனன்னையாஸ் நான நானி ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர், உமா மகேஸ்வரி பேசுகையில், "சமூக சேவைக்காக தன்னார்வலர்களை கௌரவிக்கும் இந்த விழாவை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், பல தொண்டுகளை செய்து மனித குளத்தை உயர்த்திட தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்கள்," எனக் கூறினார். 

தொடர்ந்து, கோயமுத்தூர் பார் கேரளா இயக்கத்தைச் சேர்ந்த அஷ்யாந்த் பேசியதாவது :- இதுவரை 55 லாரிகளில் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றினர். 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்தப் பணிகளில் கலந்துகொண்டனர். கேரளாவிற்கும் நமக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால், தமிழனாக நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம்," என்றார்.



இந்த நிகழ்ச்சியில் அஷ்யாந்த் (#CBE4KERALA), லஷ்மணன் (சக்ரிபைஸ் பிரண்ட்ஸ் கிளப்), பி. முருகன் (நிழல் மையம்), பிரதிப் (லெட்ஸ் தாங்க் பவுண்டேசன்), ஜெகதிஸ் (ஈகை திறன்), கிசோர் குமார் எம்.சி.3, கோவை வைல்டு லைப், பசுமை இயக்கம் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கபட்டனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...