திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகன ஒட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.
திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகன ஒட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.
தமிழகத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதன் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இன்று (ஆக.,25) முதல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும், தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைக் கொடுத்து போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர் கஜேந்திரன், தெற்கு காவல் உதவி ஆணையர் தங்கவேல், போக்குவரத்து ஆய்வாளர் ஜானகிராமன், உதவி ஆய்வாளர்கள் பாண்டியராஜன், கதிரேசன் உள்பட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதன் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இன்று (ஆக.,25) முதல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும், தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைக் கொடுத்து போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர் கஜேந்திரன், தெற்கு காவல் உதவி ஆணையர் தங்கவேல், போக்குவரத்து ஆய்வாளர் ஜானகிராமன், உதவி ஆய்வாளர்கள் பாண்டியராஜன், கதிரேசன் உள்பட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.