கோவையில் வாஜ்பாயின் அஸ்திக்கு பா.ஜ.க.,வினர், பொதுமக்கள் அஞ்சலி

கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு கோவை மாநகர பா.ஜ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு கோவை மாநகர பா.ஜ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் டெல்லி யமுனை நதி கரையோரம் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புண்ணிய நதிகளில் கரைக்க பா.ஜ.க., முடிவு செய்தது. அதன்படி, தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட அனைத்து மாநில தலைவர்களுக்கு வாஜ்பாயின் அஸ்தி கொடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் கொண்டு வரப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி, மாநிலம் முழுவதும் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 

மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வழியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு பா.ஜ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 



இதைத் தொடர்ந்து, கோவை மாநகர பா.ஜ.க., அலுவலகத்திலிருந்து அவரது அஸ்தி எடுத்து வரப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாயின் உருவப் படம் கொண்ட வாகனத்தின் பின்னே ஏராளமான பா.ஜ.க.,வினர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் வழியாக பேரூருக்கு ஊர்வலமாக சென்றனர். 

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், கோட்டப் பொறுப்பாளர் ஜி.கே.எஸ்., செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், கருமுத்து தியாகராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர், பேரூர் படித்துறையில் அஸ்திக்கு சடங்குகள் செய்யப்பட்டது. அங்கிருந்து வாஜ்பாயின் அஸ்தி பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர் சென்றடைகிறது. அங்கு அஞ்சலி செலுத்திய பிறகு, காங்கேயம், மொடக்குறிச்சி, ஈரோடு வழியாக நாளை (ஆக.,26) மாலை பவானி கூடுதுறையில் அவரது அஸ்தி கரைக்கப்பட உள்ளது. 


Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...