கோவை: கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வரும் சூழலில் பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, துணிகள், மருந்துகள் ஆகியவற்றை சிரியன் சர்ச் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று காலை அனுப்பி வைத்தனர். மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையில் இந்த நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், கட்சி தொண்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வசூல் செய்த 3 லட்சம் ரூபாய் பணத்தை திருச்சூர் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தனர் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வரும் சூழலில் பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, துணிகள், மருந்துகள் ஆகியவற்றை சிரியன் சர்ச் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று காலை அனுப்பி வைத்தனர். மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையில் இந்த நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், கட்சி தொண்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வசூல் செய்த 3 லட்சம் ரூபாய் பணத்தை திருச்சூர் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தனர் அக்கட்சியினர் தெரிவித்தனர்.