நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களோடு மக்களாக வலம் வந்த மக்னா யானை நேற்று (வெள்ளிக்கிழமை) செப்டிக் டேங்கிற்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களோடு மக்களாக வலம் வந்த மக்னா யானை நேற்று (வெள்ளிக்கிழமை) செப்டிக் டேங்கிற்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

40 வயதைக் கடந்துவிட்ட மக்னா-வுக்கு மக்களை அச்சுறுத்தும் வழக்கம் கிடையாது. இதனால் காட்டு யானை என்றும் பாராமல் அந்த யானைக்கு நீலகிரி மாவட்ட மக்கள் அதற்கு தென்னை மட்டை மற்றும் பலாக்காய்களை வழங்கினர்.
அதனை ஆசியோடு உண்டு வாழ்ந்து வந்தது அந்த ஆண் யானை. சிலர் அதனை காயப்படுத்திய போதிலும் அந்த யானை மனிதர்களை தாக்கவில்லை. மாறாக அங்கிருந்த ஆட்டோக்களை சேதப்படுத்தி தனது எதிர்ப்பை வெளிக்காட்டியது.
இப்படியாக மக்கள் மீது அன்பு செலுத்தி வந்த மக்னா கடந்த (புதன்கிழமை) கூடலூர் அருகே உள்ள பாலவாடி குறிஞ்சி நகர் ஆதிவாசி காலனிக்கு சென்றது. அப்போது அங்கிருந்த கழிவு நீர் தொட்டி மீது எதிர்பாராதவிதமாக கால் வைத்துள்ளது. அப்போது காங்கிரீட் மூடி உடைந்து யானையின் முன்னங்கால் கழிவு நீர் தொட்டியில் இறங்கியது.

இதனால் குழந்தை தவழும் நிலையில் விழுந்த மக்னா, அங்கிருந்து எழ முடியாமல் பரிதவித்தது. நாள் முழுவதும் அங்கேயே உயிருக்குப் போராடிய மக்னா பரிதாபமாக பலியானது.
அன்பாகச் சுற்றித்திரிந்த மக்னா உயிரிழந்ததை பொதுமக்களால் ஏற்க முடியவில்லை. பலரும் வேதனை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மக்னா உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்னா யானைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மண்ணை விட்டுப் பிரிந்தாலும், மக்கள் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தது இந்த மக்னா.

40 வயதைக் கடந்துவிட்ட மக்னா-வுக்கு மக்களை அச்சுறுத்தும் வழக்கம் கிடையாது. இதனால் காட்டு யானை என்றும் பாராமல் அந்த யானைக்கு நீலகிரி மாவட்ட மக்கள் அதற்கு தென்னை மட்டை மற்றும் பலாக்காய்களை வழங்கினர்.
அதனை ஆசியோடு உண்டு வாழ்ந்து வந்தது அந்த ஆண் யானை. சிலர் அதனை காயப்படுத்திய போதிலும் அந்த யானை மனிதர்களை தாக்கவில்லை. மாறாக அங்கிருந்த ஆட்டோக்களை சேதப்படுத்தி தனது எதிர்ப்பை வெளிக்காட்டியது.
இப்படியாக மக்கள் மீது அன்பு செலுத்தி வந்த மக்னா கடந்த (புதன்கிழமை) கூடலூர் அருகே உள்ள பாலவாடி குறிஞ்சி நகர் ஆதிவாசி காலனிக்கு சென்றது. அப்போது அங்கிருந்த கழிவு நீர் தொட்டி மீது எதிர்பாராதவிதமாக கால் வைத்துள்ளது. அப்போது காங்கிரீட் மூடி உடைந்து யானையின் முன்னங்கால் கழிவு நீர் தொட்டியில் இறங்கியது.

இதனால் குழந்தை தவழும் நிலையில் விழுந்த மக்னா, அங்கிருந்து எழ முடியாமல் பரிதவித்தது. நாள் முழுவதும் அங்கேயே உயிருக்குப் போராடிய மக்னா பரிதாபமாக பலியானது.
அன்பாகச் சுற்றித்திரிந்த மக்னா உயிரிழந்ததை பொதுமக்களால் ஏற்க முடியவில்லை. பலரும் வேதனை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மக்னா உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்னா யானைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மண்ணை விட்டுப் பிரிந்தாலும், மக்கள் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தது இந்த மக்னா.