இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

கோவை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் வெள்ளலூர் குளத்தில் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

கோவை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் வெள்ளலூர் குளத்தில் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிந்து கொண்டனர். 



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் வெள்ளலூர் குளம் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சமஸ்கார அகாடமியும் இணைந்து இயற்கையைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில், 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் ஆறுகளின் முக்கியத்துவம் மற்றும் அதனைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார். 



அப்போது, பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் அடையும் மாசுபாடு குறித்து மணிகண்டன் பேசியதாவது :- பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய்களில் நீர் சாதாரணமாக பாய்ந்து ஓட முடியாதவாறு அடைப்பை ஏற்படுத்துகின்றன. இது குளங்களை வறட்சியடையச் செய்ய முக்கிய காரணியாக இருக்கிறது. வெள்ளலூர் குளம் கடந்த 12 ஆண்டுகளாக நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்தான், என்றார். 



மேலும், இந்த குளத்தினால் பறவைகள், மீன்கள் போன்ற உயிரினங்களும் பயனடைவதை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...