முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

திருச்சி முக்கொம்பு மேலணையில் கடந்த 2 நாட்களில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் கடும் வெள்ளப் பெருக்கால் உடைத்தெறியப்பட்டது. இதையடுத்து, உடைந்த மதகுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, தமிழக அமைச்சர்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் உடன் சென்று பார்வையிட்டனர். 

மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :- 

மேலணையில் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் பணி முடிந்து விடும். 182 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அணை கட்டப்பட்டது. 1924, 1977, 2013 ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது உபரி நீர் வெளியேறியது. தற்போது, தொடர்ந்து 8 நாட்களாக உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக மதகுகள் வழியாக தொடர்ந்து வந்ததால் உடைந்து விட்டது. 

விரைவில் புதிய அணை கட்டப்படும். புதிய அணைக்கு மொத்தம் ரூ. 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 325 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் அய்யன் கால்வாயில் ரூ. 85 கோடியில் மேலும் அணையும் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...