திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் கடந்த 2 நாட்களில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் கடும் வெள்ளப் பெருக்கால் உடைத்தெறியப்பட்டது. இதையடுத்து, உடைந்த மதகுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தமிழக அமைச்சர்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் உடன் சென்று பார்வையிட்டனர்.
மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :-
மேலணையில் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் பணி முடிந்து விடும். 182 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அணை கட்டப்பட்டது. 1924, 1977, 2013 ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது உபரி நீர் வெளியேறியது. தற்போது, தொடர்ந்து 8 நாட்களாக உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக மதகுகள் வழியாக தொடர்ந்து வந்ததால் உடைந்து விட்டது.
விரைவில் புதிய அணை கட்டப்படும். புதிய அணைக்கு மொத்தம் ரூ. 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 325 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் அய்யன் கால்வாயில் ரூ. 85 கோடியில் மேலும் அணையும் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் கடந்த 2 நாட்களில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் கடும் வெள்ளப் பெருக்கால் உடைத்தெறியப்பட்டது. இதையடுத்து, உடைந்த மதகுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தமிழக அமைச்சர்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் உடன் சென்று பார்வையிட்டனர்.
மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :-
மேலணையில் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் பணி முடிந்து விடும். 182 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அணை கட்டப்பட்டது. 1924, 1977, 2013 ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது உபரி நீர் வெளியேறியது. தற்போது, தொடர்ந்து 8 நாட்களாக உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக மதகுகள் வழியாக தொடர்ந்து வந்ததால் உடைந்து விட்டது.
விரைவில் புதிய அணை கட்டப்படும். புதிய அணைக்கு மொத்தம் ரூ. 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 325 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் அய்யன் கால்வாயில் ரூ. 85 கோடியில் மேலும் அணையும் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.