கோவை: இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை: இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை தமிழக மக்கள் பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டுநர் மட்டுமல்லாது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றால், மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணிவது உயிருக்குப் பாதுகாப்பானது, இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை தமிழக மக்கள் பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டுநர் மட்டுமல்லாது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றால், மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணிவது உயிருக்குப் பாதுகாப்பானது, இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.