திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் தனிப்பிரிவு காவலா் இன்று மதியம் அங்குள்ள வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, வாடகை வீட்டில் தங்கி நல்லுசாமி பிச்சை (40), மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி (25) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் வீட்டிலேயே மடக்கிப் பிடித்தார்.

பின்னர், மடத்துக்குளம் காவல் ஆய்வாளா் மகேந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு, தம்பதியை கைது செய்த போலீசார், வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் தனிப்பிரிவு காவலா் இன்று மதியம் அங்குள்ள வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, வாடகை வீட்டில் தங்கி நல்லுசாமி பிச்சை (40), மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி (25) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் வீட்டிலேயே மடக்கிப் பிடித்தார்.

பின்னர், மடத்துக்குளம் காவல் ஆய்வாளா் மகேந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு, தம்பதியை கைது செய்த போலீசார், வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.