மழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டி கனமழை மற்றும் வெள்ளம், கொச்சி விமான நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக விமான நிலையம் மூடியே கிடக்கிறது. அங்கு இன்னும் தண்ணீர் வடியாததால், 26-ம் தேதி வரை விமான நிலையத்தைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொச்சி விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில், பெரியாறு அணையில் இருந்து வெளியேறிய உபரி நீரினால் சேதமடைந்த 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ள விமான நிலைய சுற்றுப்புறச் சுவர், ஓடுபாதை, ஓடுபாதை விளக்குகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் நிறுத்துமிடங்கள், டாக்சி நிறுத்துமிடம், கடைகள், எலக்ட்டிரானிக் பொருட்கள் உள்ளிட்டவை சீர்செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டி கனமழை மற்றும் வெள்ளம், கொச்சி விமான நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக விமான நிலையம் மூடியே கிடக்கிறது. அங்கு இன்னும் தண்ணீர் வடியாததால், 26-ம் தேதி வரை விமான நிலையத்தைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் ரூ. 220 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொச்சி விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில், பெரியாறு அணையில் இருந்து வெளியேறிய உபரி நீரினால் சேதமடைந்த 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ள விமான நிலைய சுற்றுப்புறச் சுவர், ஓடுபாதை, ஓடுபாதை விளக்குகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் நிறுத்துமிடங்கள், டாக்சி நிறுத்துமிடம், கடைகள், எலக்ட்டிரானிக் பொருட்கள் உள்ளிட்டவை சீர்செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.