திருப்பூர் : தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ரீடு நிறுவனம் சார்பில் நூற்பாலை மற்றும் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.
திருப்பூர் : தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ரீடு நிறுவனம் சார்பில் நூற்பாலை மற்றும் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

இன்று தனியார் ஓட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, ரீடு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் ஆழகியம்மாள், நந்தினி மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணியாற்ற வரும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி, சம்பளம், ஆகியவை நெறிமுறைபடுத்தப்படும். முதற்கட்டமாக பெண் தொழிலாளர்களின் வருகைப் பதிவு, பதிவு செய்யப்படும். அவர்களின் விபரங்கள் கணக்கு எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிலும் கமிட்டி அமைக்கப்படும். பெண் தொழிலாளர்களுக்கு முறையாகப் பாதுகாப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்," இவ்வாறு அவர் கூறினார்.

இன்று தனியார் ஓட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, ரீடு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் ஆழகியம்மாள், நந்தினி மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணியாற்ற வரும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி, சம்பளம், ஆகியவை நெறிமுறைபடுத்தப்படும். முதற்கட்டமாக பெண் தொழிலாளர்களின் வருகைப் பதிவு, பதிவு செய்யப்படும். அவர்களின் விபரங்கள் கணக்கு எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிலும் கமிட்டி அமைக்கப்படும். பெண் தொழிலாளர்களுக்கு முறையாகப் பாதுகாப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்," இவ்வாறு அவர் கூறினார்.