நாமக்கல் அருகே 4 வயது குழந்தை ஆற்றில் விழுந்த சம்பவம்: குடும்பத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது விபரீதம்

நாமக்கல்: காவிரி ஆற்றில் குடும்பத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது, பெற்றோரின் கையில் இருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: காவிரி ஆற்றில் குடும்பத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது, பெற்றோரின் கையில் இருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் ஐ.பி.ஜி., நகரை சேர்ந்தவர் பாபு. ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருபவரான இவருக்கும், மனைவி கஸ்தூரி என்பவருக்கும் 4 வயதில் தன்வந்து என்ற மகன் இருந்தார். மகன் தன்வந்து நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். 



இந்நிலையில், சிறுவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், பாபு தனது குடும்பத்துடன் சென்று பரமத்தி வேலூரில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து, இன்று தன்வந்த் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார்.

தன்னை காவேரி ஆற்றிக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என அடம்பிடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, தன்வந்தை, அவரது தந்தை காரில் நாமக்கல் மோகனூர் - வாங்கல் காவிரி பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாய்ந்து செல்லும் நீரை ரசித்துக் கொண்டிருந்தனர். 

மேலும், செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தன்வந்த் ஆற்றில் தவறி விழுந்ததையடுத்து பதறி போன பாபு மோகனூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன்பேரில் போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தன்வந்தை தேடி பார்த்தனர்.

ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தன்வந்தை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கால் மாயனூர் தடுப்பணையில் தன்வந்த் கிடைக்க வாய்ப்புள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். 

காவேரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்பி எடுக்கத் தடை நீடித்த போதிலும், நாமக்கல் மோகனூர் காவேரி ஆற்றின் பாலத்தின் மீது செல்பி எடுத்தபோது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...