திருப்பூர்: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழில் துறை அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே மவுன ஊர்வல அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழில் துறை அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே மவுன ஊர்வல அஞ்சலி செலுத்தினர்.

கடந்த வாரம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது முதிர்வு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். நாடு முழுவதும் அவரது மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலமாக சென்று வாஜ்பாயின் திருவுருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க., தி.மு.க., ம.தி.மு.க., கட்சிகள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம், தொழிற்துறை அமைப்பினர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
