உதகையில் இளம்படுகர் சார்பில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம்

நீலகிரி: தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவிற்கு இளம் படுகர் சங்கம் சார்பில் உதகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி: தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவிற்கு இளம் படுகர் சங்கம் சார்பில் உதகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

கடந்த 7-ம் தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இலக்கியவாதிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், படுகர் இன மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கிய கருணாநிதிக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உதகையில் உள்ள இளம்படுகர் சங்க கட்டிடத்தில் நடந்தது. முன்னதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் படுகர் இன மக்கள் பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி ஆட்சியின் போது, முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களுக்கு அந்தஸ்து வழங்கும் வகையில், தமிழக அமைச்சரவையில் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கிக் கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...