கேரளா: கேரளாவுக்கு நிவாரண உதவி கேட்ட சமூக வலைதள பதிவில், காண்டம் வாங்கித் தரட்டுமா என்று கேட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஊழியரைப் பணியில் இருந்து ஓமன் நாட்டு நிறுவனம் நீக்கியுள்ளது.
கேரளா: கேரளாவுக்கு நிவாரண உதவி கேட்ட சமூக வலைதள பதிவில், காண்டம் வாங்கித் தரட்டுமா என்று கேட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஊழியரைப் பணியில் இருந்து ஓமன் நாட்டு நிறுவனம் நீக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் கேரளா மாநிலம் ஸ்தம்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளனர். மேலும், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கேரளாவிற்காக உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஓமன் நாட்டில் பணிபுரிந்து வரும், ராகுல் புதலத்து என்பவர் தனது பதிவில் நிவாரணப் பொருளாக காண்டம் வேணுமா..? எனக் கேட்டுள்ளார். சொந்த மாநில மக்களின் துயரத்தைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை கிண்டல் செய்யும் வகையிலான அவரது பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டார். மேலும், அந்த பதிவு இட்டபோது தான் போதையில் இருந்ததாகவும் விளக்கமளித்தார்.
இந்நிலையில், சொந்த மாநில மக்களின் துயரத்தை புரிந்து கொள்ளாமல், ஏளனமாக கருத்து பதிவிட்டிருந்த ராகுல் புதலத்தை பணியில் இருந்து நீக்கி ஓமன் நாட்டு நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, அவர் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்ப இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் கேரளா மாநிலம் ஸ்தம்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளனர். மேலும், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கேரளாவிற்காக உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஓமன் நாட்டில் பணிபுரிந்து வரும், ராகுல் புதலத்து என்பவர் தனது பதிவில் நிவாரணப் பொருளாக காண்டம் வேணுமா..? எனக் கேட்டுள்ளார். சொந்த மாநில மக்களின் துயரத்தைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை கிண்டல் செய்யும் வகையிலான அவரது பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டார். மேலும், அந்த பதிவு இட்டபோது தான் போதையில் இருந்ததாகவும் விளக்கமளித்தார்.
இந்நிலையில், சொந்த மாநில மக்களின் துயரத்தை புரிந்து கொள்ளாமல், ஏளனமாக கருத்து பதிவிட்டிருந்த ராகுல் புதலத்தை பணியில் இருந்து நீக்கி ஓமன் நாட்டு நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, அவர் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்ப இருக்கிறார்.