கோவை: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.
கோவை: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.

நியாய விலை கடைகளில் ஆய்வு என்ற பெயரில் பல்துறை அலுவலர்கள் மாமூல் பெறுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும், விற்பனையாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், கட்டுனர் இல்லாத நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளருக்கு 1,500 கூடுதல்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கையை மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து வ.உ.சி., மைதானம் வரை பேரணியாக சென்றனர். இதில், 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தேனி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். தமிழக அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், மாநில சங்கத்தின் ஆலோசனைப்படி செப்டம்பர் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், இவ்வாறு தெரிவித்தார்.
