மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கோரி கோவையில் அரசு மருத்துவர்கள் தர்ணா

கோவை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கோவை மாவட்ட அரசு மருத்துவனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை:  மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கோவை மாவட்ட அரசு மருத்துவனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தமிழக அரசிடம், அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மருத்துவர்கள் இன்று நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவி சங்கர் கூறியதாவது :- மத்திய அரசு மருத்துவர்கள் குறுகிய காலத்தில் பணி உயர்வு பெறுகின்றனர். ஆனால், தமிழக அரசு 7 ஆண்டுகள் கழித்த பின்புதான் மருத்துவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கின்றனர். ஆகவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் எங்களது போராட்டத்தை துவக்கியுள்ளோம். வரும் 24-ம் தேதி அனைத்து மருத்துவர்களும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...