கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவனந்தபுரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவனந்தபுரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல, கொச்சி சர்வதேச விமான நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ள விமான நிலையம், நாளை முதலே செயல்பாட்டிற்கு வருகிறது. எனவே, கொச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள், திருவனந்தபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருவனந்தபுரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். மேலும், கோவை, திருவனந்தபுரம், கோழிக்கோடு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக இந்த சேவை வழங்கப்படுவதாகவம், திருவனந்தபுரத்தில் வந்து செல்லும் 9 வெளிநாட்டு விமானங்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல, கொச்சி சர்வதேச விமான நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ள விமான நிலையம், நாளை முதலே செயல்பாட்டிற்கு வருகிறது. எனவே, கொச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள், திருவனந்தபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருவனந்தபுரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். மேலும், கோவை, திருவனந்தபுரம், கோழிக்கோடு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக இந்த சேவை வழங்கப்படுவதாகவம், திருவனந்தபுரத்தில் வந்து செல்லும் 9 வெளிநாட்டு விமானங்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.