திருப்பூர் : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருப்பூர் மாவட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருப்பூர் மாவட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவிற்கு இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும், மாவட்ட நிர்வாகங்களும் உதவி புரிந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பிலான துணி, அரிசி, பற்பசை, நாப்கின், தட்டு உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்கள் அடங்கிய வாகனங்களை எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார்.
மேலும், தமிழக அரசு கால்நடைத்துறை சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கால்நடை உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பட்டுள்ளதாக அத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவிற்கு இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும், மாவட்ட நிர்வாகங்களும் உதவி புரிந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பிலான துணி, அரிசி, பற்பசை, நாப்கின், தட்டு உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்கள் அடங்கிய வாகனங்களை எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார்.
மேலும், தமிழக அரசு கால்நடைத்துறை சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கால்நடை உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பட்டுள்ளதாக அத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.