திருப்பூர்: திருப்பூரில் மழை காரணமாக நிரம்பி உள்ள குளங்களையும், நொய்யல் ஆற்றையும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர்: திருப்பூரில் மழை காரணமாக நிரம்பி உள்ள குளங்களையும், நொய்யல் ஆற்றையும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஆறுகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அதேபோல, கோவையில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் சென்றடையும் நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மழை நீர் தேங்கி உள்ள ஆண்டிபாளையம் குளம் மற்றும் நொய்யல் ஆற்றினை கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்., ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் முழுவதுமாக நிரம்பி உள்ளது. நொய்யல் ஆற்றில் 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடைப்புகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ளுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஆறுகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அதேபோல, கோவையில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் சென்றடையும் நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மழை நீர் தேங்கி உள்ள ஆண்டிபாளையம் குளம் மற்றும் நொய்யல் ஆற்றினை கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்., ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் முழுவதுமாக நிரம்பி உள்ளது. நொய்யல் ஆற்றில் 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடைப்புகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ளுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.
