திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றை பார்வையிட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூரில் மழை காரணமாக நிரம்பி உள்ள குளங்களையும், நொய்யல் ஆற்றையும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர்: திருப்பூரில் மழை காரணமாக நிரம்பி உள்ள குளங்களையும், நொய்யல் ஆற்றையும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஆறுகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அதேபோல, கோவையில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் சென்றடையும் நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.



இந்நிலையில், மழை நீர் தேங்கி உள்ள ஆண்டிபாளையம் குளம் மற்றும் நொய்யல் ஆற்றினை கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்., ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் முழுவதுமாக நிரம்பி உள்ளது. நொய்யல் ஆற்றில் 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடைப்புகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ளுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...