கோவையில் இருந்து அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தலைமையில் கேரளாவிற்கு புறப்பட்ட நிவாரணப் பொருட்கள்

கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் கோவையிலிருந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அனுப்பப்பட்டது.


கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் கோவையிலிருந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அனுப்பப்பட்டது.

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை பிற மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. 



இந்நிலையில், கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான

42 அத்தியாவசிய பொருட்கள் 21 லாரிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது. இதனை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக, கடந்த 1ஆம் தேதி சுந்தராபுரம் ஆடி கார் மோதிய விபத்தில் உயிரிழந்த 6 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி, கட்சி சார்பில் தலா ரூ. 6 லட்சம், காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியை அமைச்சர் வழங்கினார். இதில், துணை சபாநாயகர் ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கனகராஜ், ஒ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகள் அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அதிகமான பாதிப்பு காரணமாக தமிழக சுகாதாரத்துறை, கால்நடை துறை சார்பில் மாநில எல்லையோரத்தில் செய்ய வேண்டிய பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் மேல் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு கோவையிலிருந்து அனுப்பப்படுகிறது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. தற்போது 21 வாகனங்களில் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், துணிகள் என அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும்.



கேரள மக்கள் மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன். கேரள மாநிலம் இந்தப் பாதிப்பில் இருந்து கண்டிப்பாக மீண்டு வரும். தொடர்ந்து தமிழகம் உதவி செய்யும். மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் வால்பாறை, பொள்ளாச்சியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு உடனடியாக வீடு கட்டித்தரப்படும், இவ்வாறு தெரிவித்தார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...