கேரள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவும் கூகுள்

கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கேரளாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மாநிலமே தனித்தீவு போல காட்சியளித்து வருகிறது. வெள்ளத்திலிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்த மழை வெள்ளத்திற்கு 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் காணாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

 

இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் நிலையை அறிந்துகொள்வதறக்க கூகுள் இந்தியா நிறுவனம், பேரிடர் உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் உள்ள கூகுளின் இணையத் தேடுதல் பக்கத்திலேயே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அளித்துள்ள goo.gl/WxuUFp என்ற தரவுத்தளத்தில் சென்று அங்கு வழங்கப்பட்டுள்ள இரு தேர்வுகளைப் பயன்படுத்தி எளிமையாகக் கண்டுபிடிக்கலாம். ஒன்று ஒருவரைப் பற்றி தேட வேண்டும், மற்றொன்று யாரைப் பற்றியாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். 

நீங்கள் யாரைத் தேட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை அதில் பதிவு செய்தால், அந்தப் பெயரை ஒத்து இருக்கும் அனைத்தும் பெயர்களும் பரிந்துரைக்கும் அதில் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று நீங்கள் மற்றவரின் நிலை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், அதில் இருக்கும் அடுத்த ஆப்சனை கிளிக் செய்து நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டியவரின் பெயரைப் பதிவிட்டு அவரைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கலாம். 

இது குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் தங்களது டுவிட்டரில், 'நாங்கள் எப்போது கேரள மக்களுடன் துணை நிற்போம்’ என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளனர். 

இதேபோன்ற முறையைக் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...