கேரள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவும் கூகுள்

கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கேரளாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மாநிலமே தனித்தீவு போல காட்சியளித்து வருகிறது. வெள்ளத்திலிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்த மழை வெள்ளத்திற்கு 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் காணாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

 

இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் நிலையை அறிந்துகொள்வதறக்க கூகுள் இந்தியா நிறுவனம், பேரிடர் உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் உள்ள கூகுளின் இணையத் தேடுதல் பக்கத்திலேயே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அளித்துள்ள goo.gl/WxuUFp என்ற தரவுத்தளத்தில் சென்று அங்கு வழங்கப்பட்டுள்ள இரு தேர்வுகளைப் பயன்படுத்தி எளிமையாகக் கண்டுபிடிக்கலாம். ஒன்று ஒருவரைப் பற்றி தேட வேண்டும், மற்றொன்று யாரைப் பற்றியாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். 

நீங்கள் யாரைத் தேட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை அதில் பதிவு செய்தால், அந்தப் பெயரை ஒத்து இருக்கும் அனைத்தும் பெயர்களும் பரிந்துரைக்கும் அதில் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று நீங்கள் மற்றவரின் நிலை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், அதில் இருக்கும் அடுத்த ஆப்சனை கிளிக் செய்து நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டியவரின் பெயரைப் பதிவிட்டு அவரைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கலாம். 

இது குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் தங்களது டுவிட்டரில், 'நாங்கள் எப்போது கேரள மக்களுடன் துணை நிற்போம்’ என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளனர். 

இதேபோன்ற முறையைக் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...