மது போதையில் போலீசாருடன் ரகளை செய்த கோவை இளைஞர் : வித்தியாசமான தண்டனை கொடுத்த நீதிபதி

கோவை: கோவையில் மது போதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்கள் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவையில் மது போதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்கள் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன் (28). இவர் கடந்த மாதம் 27-ம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதர்சனின் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது, சுதர்சன் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தைச் செலுத்திவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 



ஆனால், குடிபோதையில் இருந்த அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொது இடத்தில் வைத்து போலீசாரை தரக்குறைவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரிச்சர்டு, சட்டம், ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், வந்த ரத்தினபுரி போலீசார் குடிபோதையில் இருந்த சுதர்சனை கைது செய்து, அவர் மீது அரசு அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.



இதனைத் தொடர்ந்து சுதர்சன், தான் மது போதையில் காவல்துறையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்கள் கைதட்டியதால் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இந்தநிலையில், நிபந்தனை ஜாமினில் வந்த அவரை, காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார். தற்போது சுதர்சன், காந்திபுரம் பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்து வருகிறார். 

மது போதையில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞருக்கு கிடைத்துள்ள இந்த வித்தியாசமான தண்டனை ஆச்சரியம் கலந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...