கேரளா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழக அரசு ஏற்கனவே ரூ. 5 கோடி வழங்கியுள்ள நிலையில், மேலும் ரூ. 5 கோடியை வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழக அரசு ஏற்கனவே ரூ. 5 கோடி வழங்கியுள்ள நிலையில், மேலும் ரூ. 5 கோடியை வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இதுவரை பெய்த மழை மற்றும் வெள்ளத்திற்கே மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து, மழை பெய்து வருவதால் இயற்கையின் பிடியில் இருந்து மீண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, தனித் தீவுகள் போல காட்சியளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. தமிழக அரசு சார்பில் கடந்த 10-ம் தேதி முதற்கட்டமாக ரூ. 5 கோடியை நிவாரண உதவியாக வழங்கியது. இந்த நிலையில், அங்கு தொடர்ந்து, ஏற்பட்டு வரும் இயற்கை பேரிடர்களால், மேலும் ரூ. 5 கோடி நிவாரணமாக இன்று (ஆக.,18) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர், 15,000 லிட்டர் உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் (UHT), வேட்டிகள், கயிலிகள், 10,000 போர்வைகள், ரூ. 1 கோடி மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் கால்நடைக் குழுக்களையும் தமிழக அரசு உடனடியாக கேரளாவிற்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளின் சார்பில் தலா ரூ.10 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்கியுள்ளன.
கேரள மாநிலத்தில் இதுவரை பெய்த மழை மற்றும் வெள்ளத்திற்கே மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து, மழை பெய்து வருவதால் இயற்கையின் பிடியில் இருந்து மீண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, தனித் தீவுகள் போல காட்சியளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. தமிழக அரசு சார்பில் கடந்த 10-ம் தேதி முதற்கட்டமாக ரூ. 5 கோடியை நிவாரண உதவியாக வழங்கியது. இந்த நிலையில், அங்கு தொடர்ந்து, ஏற்பட்டு வரும் இயற்கை பேரிடர்களால், மேலும் ரூ. 5 கோடி நிவாரணமாக இன்று (ஆக.,18) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர், 15,000 லிட்டர் உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் (UHT), வேட்டிகள், கயிலிகள், 10,000 போர்வைகள், ரூ. 1 கோடி மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் கால்நடைக் குழுக்களையும் தமிழக அரசு உடனடியாக கேரளாவிற்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளின் சார்பில் தலா ரூ.10 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்கியுள்ளன.