கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள் எம்.பி.,யை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள் எம்.பி.,யை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மேலும், பலரது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் வால்பாறைக்கு சென்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாழைத்தோட்டம் ஆறு ஸ்டான்மோர் பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாழைத்தோட்டம் ஆறு தூர்வாரப்படாததால் தான் வெள்ளம் வீடுகளுக்குள் வருகிறது ஆகவே, ஆற்றை தூர்வாருவதுடன் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, மக்களிடம் பேசிய எம்.பி., மகேந்திரன், மழை நின்றவுடன் தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், வால்பாறை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மேலும், பலரது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் வால்பாறைக்கு சென்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாழைத்தோட்டம் ஆறு ஸ்டான்மோர் பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாழைத்தோட்டம் ஆறு தூர்வாரப்படாததால் தான் வெள்ளம் வீடுகளுக்குள் வருகிறது ஆகவே, ஆற்றை தூர்வாருவதுடன் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, மக்களிடம் பேசிய எம்.பி., மகேந்திரன், மழை நின்றவுடன் தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், வால்பாறை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
