கேரளாவிற்கு 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பிய தெற்கு ரயில்வே

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 2.8 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்களின் மூலம் தெற்கு ரயில்வே அனுப்பி வைத்துள்ளது.


கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 2.8 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்களின் மூலம் தெற்கு ரயில்வே அனுப்பி வைத்துள்ளது.



தென்மேற்கு தீவிரமடைந்துள்ள கேரளாவில் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 2.8 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்களின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவசரகாலப் பொருட்களாக அனுப்பி வைக்கப்படும் இந்த குடிநீரானது, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. மேலும், ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய 10,000 பெட்டிகளும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் பல்லூர் பிளான்ட்டில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் பாட்டில்கள் அடங்கிய 15,000 பெட்டிகளில், தலா 660 பெட்டிகள் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 12695 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கேரளா அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, தேவைப்படும் இடங்களுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...