தேனி: வைகை அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி: வைகை அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாயும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது வைகை அணை ஆகும். 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 71 அடி வரை நீரைத் தேக்கி வைக்க முடியும்.
இந்த அணை மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் விவசாயம், குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியது. அணைக்கு 4,227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர் இருப்பு 4,854 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 69 அடியை எட்டும்போது மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாயும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது வைகை அணை ஆகும். 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 71 அடி வரை நீரைத் தேக்கி வைக்க முடியும்.
இந்த அணை மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் விவசாயம், குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியது. அணைக்கு 4,227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர் இருப்பு 4,854 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 69 அடியை எட்டும்போது மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.