வால்பாறையில் வரலாறு காணாத வெள்ளம் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வால்பாறை நகரில் வாழைத்தோட்டம், காமராஜ் நகர், காந்தி நகர், டோபி காலனி, சிறுவர் பூங்கா மற்றும் ஸ்டான்மோர் எம்.ஜி ஆர் நகர் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வால்பாறை நகரில் வாழைத்தோட்டம், காமராஜ் நகர், காந்தி நகர், டோபி காலனி, சிறுவர் பூங்கா மற்றும் ஸ்டான்மோர் எம்.ஜி ஆர் நகர் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.



இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அரசு போக்குவரத்து பணிமனை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனிடையே பல இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் அடியில் மண் சரிவு ஏற்பட்டதால் வால்பாறை பொள்ளாச்சி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த இடங்களை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு காவல் ஆய்வாளர் திருமேனி, வட்டாட்சியர் சியாமளா தேவி, தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது மயில் கணேசன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டனர்.



மேலும், பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகள் மற்றும் நகராட்சி சமுதாய கூடங்களில் தங்கவும், அவர்களுக்கான உணவையும் ஏற்பாடு செய்தனர். வெள்ளம் வீடுகளுக்குள் புகாமல் இருக்க வாழைத்தோட்ட ஆற்றைத் தூர் வார நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...