கோவை: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சித்ரா பகுதியில் இருந்து 94 என்ற இலக்கமிட்ட அரசு பேருந்து ஒன்று காந்திபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். அந்த பேருந்து மணி மேல்நிலைப்பள்ளி சிக்னல் அருகே சென்ற போது அங்கிருந்த சிலர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.இந்த தாக்குதலில் பேருந்தின் நடத்துனர் கைலாசம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதே போல், ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து, காந்திபுரம் நோக்கி எஸ்.1 என்ற இலக்கமிட்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது அதன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணியளவில் 14 சி என்ற இலக்கமிட்ட ஈஷா யோக மையம் செல்லும் பேருந்து ஆலாந்துறை அடுத்த பூளுவப்பட்டி வந்தபோது மர்ம நபர்கள் பேருந்தின் மீது கல்வீசி தாக்கினர். இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்து.

பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி அருகே 13பி என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.