கோவை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடாகவில் இன்று முதல் மழை குறையும் என்று இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கோவை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடாகவில் இன்று முதல் மழை குறையும் என்று இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கர்நாடகத்தில் பெய்யும் கனமழை காரணமாக கே.எஸ்.ஆர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து 2.1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் சூழலில் இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

