பில்லூர் அணையில் இருந்து 57,000 கன அடி நீர் வெளியேற்றம்: நீரில் மூழ்கி தத்தளிக்கும் மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து இதுவரை இல்லாத வகையில் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டுப்பாளையத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து இதுவரை இல்லாத வகையில் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டுப்பாளையத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 



தமிழக - கேரள எல்லையோரத்தில் உள்ள அடர்ந்த மலைக்காட்டின் நடுவே கடந்த 1968-ம் ஆண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.

இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கேரளத்தின் மலைக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகள் உள்ளன. கடந்த இருவார காலத்திற்கும் மேலாக கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பில்லூர் அணை கடந்த 11-ம் தேதி அதன் முழு கொள்ளளவு நீர்மட்டமான நூறு அடியை எட்டி நிரம்பியது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கான நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 14,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், கேரளாவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தபடி இருந்தது.

நேற்று (வியாழக்கிழமை) காலை இருபதினான்காயிரம் கன அடி, மாலை நாற்பதாயிரமாக கன அடியாக உயர்ந்தது. 

இதனால் பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 



இந்நிலையில், இன்று காலை பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரித்து வினாடிக்கு 57,000 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

இதனால் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததோடு சாலைகள் தரைப்பாலங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



 நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் வருவாய் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பில்லூர் அணை கட்டி ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மட்டுமே அணை நிரம்பி வினாடிக்கு நாற்பதாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதுவே அணையில் இருந்து அதிகபட்சமாக வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவாக இருந்த நிலையில் தற்போது 57,000 கன அடி வெளியேறுவதால் இதுவரை இல்லாத வரலாறு காணாத வகையில் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீரின் வேகம் மற்றும் சகதிகள் காரணமாக பில்லூர் அணையின் நீர் மின் உற்பத்தி மோட்டார்கள் பழுதடைந்து விடும் என்பதால் இங்கு தினசரி உற்பத்தி செய்யப்பட்டு வந்த நூறு மெகா வாட் மின் உற்பத்தி பணிகளும் தடைபட்டுள்ளது. 

மழை ஓய்ந்தால் மட்டுமே நிலைமை சீரடையும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...