குண்டும், குழியுமான தரைப்பாலம் : உயிரிழப்பிற்கு முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி..?

கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மட்டுமின்றி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்வே தரைப்பாலங்களின் நிலை படுமோசமாக உள்ளன.


கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மட்டுமின்றி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்வே தரைப்பாலங்களின் நிலை படுமோசமாக உள்ளன.



குறிப்பாக, ஆவாரம்பாளையத்தை அடுத்துள்ள ஷோபா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலம் தொடர்மழை காரணமாக நீச்சல் குளம் போல் மாறியுள்ளது. முறையான வடிகால் வசதியில்லாததால், மழைநீர் பாலத்தில் தேங்கியுள்ளதோடு, சாலையின் தார் தளங்கள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான பள்ளங்களாக இவை உருவாகியுள்ளன.



"தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால், தொடர்ந்து வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியைக் கடக்கும் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்வதால், இந்த சாலையில் தினமும் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் எழுப்பும் சத்தத்தால் சாலையை ஒட்டி வசிக்கும் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல்வேறு குறுந்தொழிற்கூடங்கள் இங்கு உள்ளதால், கனரக வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு தரமான சாலை மற்றும் தரைப்பாலத்தின் தளங்கள் அமைத்திட வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார் ஓர் குடியிருப்புவாசி.



ஆவாரம்பாளையத்தில் இருந்து கணபதி நோக்கி செல்லும் சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், சத்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஷோபா நகர் சாலையில் உள்ள இந்த தரைப்பாலத்தின் வழியாகவே மாற்றிவிடப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியின் சாலை மற்றும் தரைப்பாலம் பராமரிக்கப்படாததால் இப்பகுதியை கடப்பதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "நகரில் உள்ள ரயில்வே தரைப்பாலங்கள் அனைத்தும் ரயில்வே துறையால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஷோபா நகரில் உள்ள இந்தப் பாலத்தை ரயில்வே துறையினர் முறையாக பராமரிப்பதில்லை. மழைநீர் தேங்கி நிற்கும் சமயங்களில் மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்புகள் வைத்து வெள்ளநீரை வெளியேற்றி வருகிறோம். சேதமடைந்த தார் சாலைகளில் விரைவில் பேட்ச்வொர்க் செய்யப்படும்," என்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...