பாலக்காடு: கனமழை காரணமாக கொச்சி விமான நிலையாம் வரும் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. மேலும், கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் பாலக்காடு பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன.
பாலக்காடு: கனமழை காரணமாக கொச்சி விமான நிலையாம் வரும் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. மேலும், கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் பாலக்காடு பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன.
மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கேரளத்திற்கு போக்குவரத்து வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்த்த கனமழையால் கொச்சி விமான நிலையம் மூழ்கியதைத் தொடர்ந்து நேற்று அந்த விமான நிலையம் மூடப்பட்டது.
கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையும் மழை வெள்ளத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 18-ம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், இன்றும் மழை அதிகரித்துள்ளதால், வரும் 26-ம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில் சேவை
கேரளாவில் ரயில் சேவையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரயில்கள் பாலக்காடு ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படுகின்றன. கோவையில் இருந்து கேரளா நோக்கி எந்த ரயில்களும் புறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கேரளத்திற்கு போக்குவரத்து வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்த்த கனமழையால் கொச்சி விமான நிலையம் மூழ்கியதைத் தொடர்ந்து நேற்று அந்த விமான நிலையம் மூடப்பட்டது.
கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையும் மழை வெள்ளத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 18-ம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், இன்றும் மழை அதிகரித்துள்ளதால், வரும் 26-ம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில் சேவை
கேரளாவில் ரயில் சேவையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரயில்கள் பாலக்காடு ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படுகின்றன. கோவையில் இருந்து கேரளா நோக்கி எந்த ரயில்களும் புறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.