கோவை: வால்பாறையில் ஏற்படுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
கோவை: வால்பாறையில் ஏற்படுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மண் சரிவு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் பொள்ளாச்சி பணிமனையில் இருந்து வால்பாறைக்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. வால்பாறை சாலையில் தற்போது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே கார், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
மழை வெள்ளத்தால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த சூழலில், மழை நீரால் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்கும் பணியில் இன்று காலை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மனம்பள்ளி எஸ்டேட் பகுதியில் வேளாங்கண்ணி (41) என்ற பெண் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மண் சரிவு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் பொள்ளாச்சி பணிமனையில் இருந்து வால்பாறைக்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. வால்பாறை சாலையில் தற்போது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே கார், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
மழை வெள்ளத்தால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த சூழலில், மழை நீரால் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்கும் பணியில் இன்று காலை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மனம்பள்ளி எஸ்டேட் பகுதியில் வேளாங்கண்ணி (41) என்ற பெண் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.