திருப்பூர்: நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயக்கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயக்கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் வழியாக பாய்ந்து செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்து, அணைப்பாளையாம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக ராயபுரம் - மங்கலம் சாலையை இணைக்கும் தரை பாலத்திலும் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பாலத்தின் வழியே பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வெள்ளப் பெருக்கைப் பயன்படுத்தி சாய ஆலையினர், சாயக்கழிவு நீரை நொய்யலாற்றில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் வழியாக பாய்ந்து செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்து, அணைப்பாளையாம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக ராயபுரம் - மங்கலம் சாலையை இணைக்கும் தரை பாலத்திலும் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பாலத்தின் வழியே பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வெள்ளப் பெருக்கைப் பயன்படுத்தி சாய ஆலையினர், சாயக்கழிவு நீரை நொய்யலாற்றில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.