கோவை: கருமத்தம்பட்டி அருகே கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட சைனா, கேரளா கண்ணூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கோவை: கருமத்தம்பட்டி அருகே கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட சைனா, கேரளா கண்ணூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் ரூபேஸ், அவரது மனைவி சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் 17 வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், கருமத்தம்பட்டியில் கைது செய்யப்பட்ட போது போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ஜாமீன் வழங்கியது. தினமும் கியூ பிராஞ்ச் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து இருந்தது.
இருப்பினும், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையில் இருந்தார். இந்நிலையில் ஒவ்வொன்றாக அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. இதனையடுத்து, கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை சிறையில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மாவோயிஸ்ட் சைனா நேற்று (ஆக.,14) மாலை ஜாமீனில் விடுதலையானார்.
கண்ணூர் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியபடி வரவேற்றனர். தினமும் கோவை கியூ பிராஞ்ச் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட் சைனா வரும் 16-ம் தேதி முதல் கோவை கியூ பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட இருக்கின்றார். மாவோயிஸ்ட் ரூபேஸ் தற்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வீரமணி, அனூப், கண்ணன் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் ரூபேஸ், அவரது மனைவி சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் 17 வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், கருமத்தம்பட்டியில் கைது செய்யப்பட்ட போது போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ஜாமீன் வழங்கியது. தினமும் கியூ பிராஞ்ச் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து இருந்தது.
இருப்பினும், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையில் இருந்தார். இந்நிலையில் ஒவ்வொன்றாக அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. இதனையடுத்து, கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை சிறையில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மாவோயிஸ்ட் சைனா நேற்று (ஆக.,14) மாலை ஜாமீனில் விடுதலையானார்.
கண்ணூர் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியபடி வரவேற்றனர். தினமும் கோவை கியூ பிராஞ்ச் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட் சைனா வரும் 16-ம் தேதி முதல் கோவை கியூ பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட இருக்கின்றார். மாவோயிஸ்ட் ரூபேஸ் தற்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வீரமணி, அனூப், கண்ணன் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.