வெள்ளத்தால் பாரம்பரிய விழாவைப் புறக்கணித்த கேரளம் : உதவும் நெஞ்சம் தவிர்த்து ஓணப் பண்டிகையை கொண்டாடிய கோவை கல்லூரி

கோவை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பாரம்பரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த கல்லூரி ஒன்று அம்மாநிலத்திற்கு உதவும் மனப்பான்மையை மறந்து ஓணத்தைக் கொண்டாடியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பாரம்பரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அம்மாநிலத்திற்கு உதவும் மனப்பான்மையை மறந்து ஓணத்தைக் கொண்டாடியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கண்ணூர், கோழிக்கூடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இந்த கனமழைக்கு சீர்குலைந்து போயின. சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழகம் மற்றும் பிற அண்டை மாநிலங்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் பல்வேறு கட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், கேரள மக்கள் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பெரும் துயரத்திற்கு ஆளாகியிருப்பதால், இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், அங்கு சுதந்திர நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இதேபோல, பிற மாநிலங்களிலோ அல்லது மாவட்டங்களிலோ உள்ள கல்லூரிகள், பள்ளிகளும் ஓணப் பண்டிகையை புறக்கணித்ததோடு மட்டுமில்லாமல், நிதி சேகரித்து கேரளாவிற்கு நிவாரணத் தொகையாக அனுப்பி வைத்து வருகின்றனர். 



இந்த நிலையில், கடந்த வாரம் கோவையில் செயல்படும் கல்லூரி ஒன்றில், சில மாணவர்கள் பிற மாணவர்களிடம் பணம் திரட்டி ஓணம் பண்டிகைக் கொண்டாடியுள்ளனர். கேரளாவின் பாரம்பரிய ஆடை அணிந்து மாணவ, மாணவிகள் இந்தப் பண்டிகையை சிறப்பித்துள்ளனர். பாரம்பரிய பண்டிகையை கொண்டாட வேண்டிய கேரளாவே, இந்த ஆண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ள நிலையில், அண்டை மாவட்டமான கோவையில் உள்ள கல்லூரியில் ஓணம் அவசியம் தானா..? என்ற கேள்வி அனைவரிடத்தில் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டி சார்பில் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டறிய முயற்சித்தும், எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லை.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...